Breaking News
கொலம்பியாவில் பலி உயர்வு

கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் புட்மாயோ மாகாணத்தில் பெருமழை பெய்து கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், பல கட்டடங்கள் தரை மட்டமாகின; ஏராளமானோர் பலியாகினர். இதுவரை 254 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.