Breaking News
ஈராக் ராணுவம் தாக்குதல் : 200 பயங்கரவாதிகள் பலி

சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் ஈராக் ராணுவம் நடத்திய தாக்குதலில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் 200 பேர் கொல்லப்பட்டனர்.சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்பதற்காக, அந்நாட்டு ராணுவங்கள், சர்வதேச நாடுகளின் உதவி படைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், பயங்கரவாதிகளின் ஆட்டம் அடங்கி வருகிறது. ஈராக்கில் பயங்கரவாதிகள் வசம் உள்ள மொசூல் நகரையும், சுற்றி உள்ள பகுதியையும் முற்றிலுமாக மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டு உள்ளது. சிரியாவின் எல்லையை ஒட்டிய ஈராக்கின் வடமேற்கு பகுதியில் உள்ள பாஜ் பகுதியில் ஈராக் படை தாக்குதல் நடத்தியது; இதில் -200 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே, பயங்கரவாதிகள் சிரியாவில் இருந்து ஈராக்கிற்குள் நுழைந்துள்ளனர் என்றும், சிரியா — ஈராக் எல்லையில் சுதந்திரமாக நடமாடுகின்றனர் எனவும் தகவல் பரவி வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.