Breaking News
தர்காவுக்கு சென்ற 20 பேர் நிர்வாணமாக்கி படுகொலை

பாகிஸ்தானில் உள்ள ஒரு தர்காவில் மனநலன் பாதிக்கப்பட்ட நிர்வாகி, 20 பேரை கொடுமைப்படுத்தி, கொடூரமான முறையில் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அண்டை நாடான, பாகிஸ்தானில், சர்கோதா மாவட்டத்தில், முகம்மது அலி குஜ்ஜார் தர்கா உள்ளது. இதன் நிர்வாகி, அப்துல் வாகீத், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். தர்காவுக்கு வந்திருந்த, 20 பேரை, நேற்று முன்தினம், அப்துல் வாகீத்தும், அவரது உதவியாளர்களும், மயக்க மருந்து கொடுத்து, நிர்வாணமாக்கி உள்ளனர். பின், அவர்கள் அனைவரையும் கத்தியால் குத்தியும், இரும்புத்தடிகளால் சரமாரியாக அடித்தும், படுகொலை செய்துள்ளனர். உயிரிழந்தவர்களில் மூன்று பேர் பெண்கள்.நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, வாகீத்தும், கூட்டாளிகள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் நடந்த தர்காவுக்கு வருவோர், தங்கள் பாவங்களை போக்குவதற்காக, தர்காவை நடத்தும் நிர்வாகிகளிடம், விருப்பப்பட்டு தடிகளால் அடி வாங்கிக் கொள்வது வழக்கம். ஆனால், வழக்கத்துக்கு மாறாக, வாகீத்தும், கூட்டாளிகளும், தர்காவுக்கு வந்தவர்களுக்கு மயக்க மருந்து தந்து, கண்மூடித்தனமாக தாக்கி படுகொலை செய்துள்ளதாக, போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.