Breaking News
ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல்: கமல் கடும் கண்டனம்

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் இளைஞர்கள் தாக்குதலுக்கான சிஆர்பிஎப் வீரர்கள் எதிர்தாக்குதல் நடத்தாமல் அமைதி காத்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி பரவி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டு வருகிறார்கள்.

இச்சம்பவம் குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்தியாவுடன் ஒத்து வாழுங்கள். எமது வீரர்களை தொட்டுப் பார்த்தவர்கள் வெட்கித் தலைகுனியட்டும். ஏனெனில் அஹிம்சையே ஆகச்சிறந்த வீரம். சிஆர்பிஎப் வீரர்கள் நல்லதொரு முன்மாதிரியை உருவாக்கியுள்ளார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.