Breaking News
திருச்சி சிறையில் 4வது நாளாக இலங்கை தமிழர் உண்ணாவிரதம்

தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழகத்திலிருந்து சென்ற விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாகவும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் இலங்கை தமிழர் மகேந்திரன் கடந்த 20ம் தேதி முதல் காலை முதல் சிறையில் உண்ணாவிரத போரட்டம் தொடங்கினார். அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உண்ணாவிரதத்தை தொடர்வதாக கூறினார். இதையடுத்து நேற்று 4வது நாளாக உண்ணாவிரதம் நீடித்தது. அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.