Breaking News
கொடைக்கானல் மலைப்பகுதியில் ஒற்றை யானையால் விவசாயிகள் பீதி

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பள்ளங்கி, கோம்பை பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக குட்டியுடன் யானைக்கூட்டம் முகாமிட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு யானைக்கூட்டம், பள்ளங்கி – கோம்பை சாலையில் 3 மணிநேரம் முகாமிட்டு டூவீலர்களில் வந்தவர்களை விரட்டியது. தற்போது ஒற்றை யானை, கணேசபுரம் பகுதியில் முகாமிட்டு தோட்டத்துக்கு வரும் விவசாயிகளை ஆக்ரோஷமாக விரட்டி வருகிறது.

விவசாயிகள் கூறுகையில், ‘‘கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் முகாமிட்டு விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. வனத்துறையினரிடம் கூறினால், ‘இது எங்கள் எல்லை கிடையாது’ என்று கூறி வரமறுக்கின்றனர். அச்சுறுத்தி வரும் யானைக்கூட்டங்களை வனப்பகுதிக்குள் விரட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.