Breaking News
உள்ளாட்சி தேர்தல் முடிவு: இயந்திர ஓட்டுப்பதிவு குறித்து கெஜ்ரிவால் மவுனம்

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.விற்கு எனது வாழ்த்துக்கள் என ஆம் ஆத்மி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டில்லி மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியடைந்தது. மொத்தம் 270 வார்டுகளில் 182 வார்டுகளை பா.ஜ. கைப்பற்றி சாதனை படைத்தது. மொத்தம் நான்கு மாநகராட்சிகளில் மூன்று மாநகராட்சிகளை கைப்பற்றியது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
இது குறித்து ஆம் ஆத்மிகட்சி முதல்வர் கெஜ்ரிவால் டுவீட்டரில் கூறியது, மூன்று மாநகராட்சிகளை பிடித்துவெற்றி பெற்ற பா.ஜ.விற்கு எனது வாழ்த்துக்கள் மூன்று மாநகராட்சியின் வளர்ச்சிக்கும் சிறந்த நிர்வாகம் அமைவதற்கும் எனது தலைமையிலான அரசு ஒத்துழைப்பு தரும் என்றார். முன்னதாக 5 மாநில சட்டசபை தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடந்ததாக புகார் கூறிவந்தார். ஆனால் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. அதைபற்றி வாய் திறக்கவில்லை.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.