Breaking News
ஒரே நாளில் 84 ஐ.ஏ.எஸ், 54 ஐ.பி.எஸ்.கள் இடமாற்றம்: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் அதிரடி

உ.பி.யில் ஒரே நாளில் 84 ஐ.ஏ.ஸ். 54 ஐ.பி.எஸ்.அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்தார் அம்மாநில முதல்வர்.

உ.பி. சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ. சாதனை வெற்றி பெற்றது. மார்ச் 19-ல் முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றார். இவர் முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி முடிவுகள் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் 84 ஐ.ஏ.எஸ்., 54 ஐ.பி.எஸ்.அதிகாரிகளை ஒரே நாளில் அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். இதில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளில் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர்கள் எனவும், கூறப்படுகிறது. முதல்வராக ஆதித்யநாத் பொறுப்பேற்றதில் இது தான் மிகப்பெரிய நடவடிக்கை என உ.பி. அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.