Breaking News
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; 3 ராணுவ வீரர்கள் வீர மரணம்

ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா அருகில் உள்ள பன்ஞ்காம் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது, பயங்கரவாதிகள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து பயங்கரவாதிகளுடன் ராணுவ வீரர்கள் துப்பாக்கிசண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஒரு மேஜர் உட்பட 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 5 பேர் காயமடைந்தனர். ராணுவ வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு துப்பாக்கிசண்டை நடந்து வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.