Breaking News
ராஜாஜி பவனில் தினகரன், மல்லிகார்ஜூனா

சென்னையில் தினகரனிடம் டில்லி போலீசார் இன்று(ஏப்-27)நடத்திய 6 மணி நேர விசாரணை நிறைவு பெற்றது .தொடர்ந்து தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவை போலீசார் ராஜாஜி பவனுக்கு அழைத்து சென்றனர்.
இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா கைது செய்யப்பட்டார். அவர்களை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த டில்லி கோர்ட் அனுமதி வழங்கியது. தினகரன் மற்றும் அவரது நண்பரை விசாரணைக்காக டில்லி போலீசார் சென்னை அழைத்து வந்தனர் . சென்னையில் உள்ள தினகரன் வீடு மற்றும் அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்..

தினகரனை சந்திக்க வந்த 2 பேர்

தினகரன் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட போது இவரை எப்படியாவது பார்க்க வேண்டும் என அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் பலர் விமான நிலையத்தில் நின்றனர். ஆனால் அதிமுகவில் பெயர் சொல்லக்கூடிய அளவிற்கு இரண்டு பேர் மட்டுமே வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும், மாநில பேச்சாளருமான நாஞ்சில் சம்பத். மற்றொருவர் கர்நாடாக மாநில அதிமுக செயலாளரான புகழேந்தி . தினகரன் வருவதற்கு முன்பே வரிசையில் காத்து நின்றனர். ஆனாலும் போலீசார் புடை சூழ வந்தததால் சில நொடி மட்டுமே பார்க்க முடிந்தது. யாருக்கும் பேச அனுமதிக்கப்படவில்லை. தினகரன் லேசான சிரிப்புடன் சென்றதை காண முடிந்தது.
ஆறு மணி நேர விசாரணை நிறைவு
சென்னையில் தினகரனிடம் டில்லி போலீசார் தொடர்ந்து ஆறு மணி நேரம் விசாரணை நடத்தினர். தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவை போலீசார் ராஜாஜி பவனுக்கு அழைத்து சென்றனர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.