Breaking News
இந்திய வீரர்கள் உடல் சிதைக்கப்பட்டது தொடர்பான கேள்விகளை தவிர்த்த பாகிஸ்தான் தூதர்

காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட 2 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது தலையை பாகிஸ்தான் ராணுவத்தினர் துண்டித்து வெறியாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பாகிஸ்தானுக்கு சரியான பதிலடியை கொடுப்போம் என இந்திய ராணுவம் சபதமிட்டு உள்ளது. ஆனால் பாகிஸ்தான் எப்போதும் போல் மறுப்பு தெரிவித்து உள்ளது. இந்தியா முழுவதும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்ற வலியுறுத்தல் எழுந்து உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் வீட்டில் அவரிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, பதில் அளிப்பதை தவிர்த்துவிட்டார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.