Breaking News
மருத்துவ மேற்படிப்பில் 50% இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டும்: தனியார் கல்லூரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இடங்களை அரசுக்கு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தனியார் கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக்கழகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு கவுன்சில் மூலம் மருத்துவ முதுநிலை படிப்பில் மாணவர்களை சேர்க்க உத்தரவு பிறப்பித்துள்ளது. எம்.டி., எம்.எஸ். மருத்துவ மேல்படிப்புகளில் பாதி இடங்களை அரசுக்கு தருவதில்லை என வழக்கு தொடரப்பட்டது. நாமக்கல் டாக்டர் காமராஜ் தொடர்ந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் விசாரித்தார்.

அரசுக்கு அபராதம்

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.1 கோடி அபராதம் விதித்துள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து ஒதுக்கீட்டு இடங்களை கேட்டு பெறவில்லை என்று அபராதம் விதித்துள்ளது. அரசு ஒதுக்கீட்டு இடங்களை ஒப்படைக்காத கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை, மேலும் அரசின் கண்டுகொள்ளதாக போக்குக்கு ரூ.1 கோடி அபாராதம் விதித்துள்ளதாக நீதிபதி கூறியுள்ளார்.

மருத்துவ கவுன்சிலுக்கு அபராதம்

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு ரூ.1 கோடி அபராம் விதித்துள்ளது. விதி மீறிய தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்காத எம்.சி.ஐ.க்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. ‘

நீதிபதிகள் கண்டனம்

தகுதி உள்ளவர் தமிழக அரசின் மெத்தனத்தால் எம்.டி., எம்.எஸ் சேர முடியவில்லை என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். கல்லூரிகள், தமிழக அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியோர் விதியை பின்பற்றவில்லை என நீதிபதி கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.