Breaking News
உலகப் போருக்கு ஒத்திகை வடகொரியா வான் பரப்பில் பறந்த அமெரிக்க போர் விமானம்

மெரிக்க போர் விமானம் ஒன்று, உலகப் போருக்கு ஒத்திகை பார்க்கும் விதமாக அணு குண்டுகளுடன் வடகொரியா வான் பரப்பில் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அணு குண்டுகளை கைவிட வடிவமைக்கப்பட்ட ராக்வெல் பி1-பி (Rockwell B1-B) என்னும் அமெரிக்காவின் போர் விமானம் வட கொரியா வான் பறப்பில் பறந்ததாக வடகொரியா அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இதே சமயம் அமெரிக்க தங்களின் போர் நடவடிக்கையிலிருந்த பின்வாங்கவில்லை என்றால் அணு ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்த தயாராக உள்ளதாக வடகொரியா எச்சரித்துள்ளது.

வட கொரியாவுடன் போர் ஏற்படும் சுழலில், கடந்த இரண்டு மாதங்களாக தென் கொரியா மற்றும் ஜப்பானுடன் கொரிய தீபகற்பம் பகுதியில் அமெரிக்க மேற்கொண்டு ராணுவ பயிற்சி கடந்த ஏப்ரல் 30ம் திகதியுடன் முடிவடைந்தது.

இந்நிலையில் பயிற்சியின் ஒர் அங்கமாக இந்த போர் விமானம் வடகொரியா வான் பரப்பில் பறந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் ராக்வெல் பி1-பி போர் விமானம் வட கொரியா வான் பரப்பில் பறந்ததை தென் கொரியா உறுதிசெய்துள்ளது. மேலும், ராணுவ பயிற்சியில் அந்த விமானம் பங்கேற்றதாக தென் கொரியா பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.