Breaking News
உலகம் முழுவதும் ஆஸ்துமா நோயால் 30 கோடி பேர் பாதிப்பு: உலக சுகாதார நிறுவனம் தகவல்

காற்று மாசுபாடு உள்ளிட்ட காரணத்தால் உலகம் முழுவதும் 30 கோடி பேர் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை வரும் 2025-ம் ஆண்டில் 40 கோடியாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் ஆஸ்துமாவின் தாக்கம் 10 முதல் 15% ஆக உள்ளது என்றும் ஆண்டுக்கு சுமார் 2.5 லட்சம் பேர் ஆஸ்துமா தாக்கத்தால் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆஸ்துமா அமைப்பான க்ளோபல் இனிசியேஷன் ஆஃப் ஆஸ்துமாவின் புள்ளிவிவரம் கூறுகிறது.

இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு மே 2-வது செவ்வாய்க்கிழமை உலக ஆஸ்துமா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. புகை பிடித்தல், தொழிற்சாலை புகை, வாகனப்புகை, குப்பைகளை எரித்தல் உள்ளிட்டவை 70% வரை ஆஸ்துமாவிற்கு காரணமாக கூறப்படுகிறது. ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் ஆஸ்துமாவை முற்றிலும் கட்டுப்படுத்தலாம். வரும் முன் காக்கும் நோக்கத்தில் பல்வேறு தன்னார்வு அமைப்பினர் விழிப்புணர்வு முயற்சிகள் எடுத்தாலும் காற்று மாசு குறைந்தபாடில்லை என்பது நிதர்சணமான உன்மை.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.