குஜராத்தில் மாங்காய் பறித்த சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு
குஜராத் மாநிலம் வல்சாத் என்ற இடத்தில் மாங்காய் பறித்த சிறுவன் மீது துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.