Breaking News
சென்னையில் மீண்டும் பள்ளம்…தொடர்கதையாகும் திடீர் பள்ளங்கள்

கடந்த சில மாதங்களாக சென்னை அண்ணாசாலையில் அவ்வப்போது திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு வந்த நிலையில், இன்று காலை கீழ்ப்பாக்கம் சாலையிலும் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில், 6 அடி அளவிற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அங்கு பெரும்பரபரப்பு நிலவிவருகிறது. மெட்ரோ ரயில் பணிகளின் காரணமாக, இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் வேகமாக செயல்பட்டு சிமெண்ட் கலவை கொண்டு பள்ளத்தை மூடி உள்ளனர்.
சில தினங்களுக்கு முன், அண்ணாசாலையில் ஏற்பட்ட பெரும்பள்ளத்தில் பஸ் மற்றும் கார் சிக்கியிருந்தது. அதை தொடர்ந்து, சாலையில் விரிசல் ஏற்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக வீடுகளில் விரிசல் ஏற்படுவது, சிமெண்ட் கலவை மற்றும் ரசாயன கலவைகள் பொங்கி வருவது, சாலையில் மணல் பொங்கி வருவது ஆகியன தொடர்கதையாகி வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.