Breaking News
மும்பை–கராச்சி விமான சேவை மே11 முதல் நிறுத்த பாக்., முடிவு

மும்பை -கராச்சி விமான சேவையை மே 11 ஆம் தேதி முதல் நிறுத்த பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் முடிவு செய்துள்ளது, மும்பை—கராச்சி இடையே வாரத்தில் ஒருநாள் இயக்கப்படும் சர்வதேச விமானத்தை மே 11 முதல் தற்காலிகமாக நிறுத்த பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் முடிவு செய்துள்ளது. மே 11 க்கு பிறகு பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம் எந்த முன்பதிவையும் மேற்கொள்ளவில்லை. விமான சேவை எதனால் நிறுத்தப்படுகிறது என்பதற்கான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. எனினும், தற்போதைய இந்தியா- -பாகிஸ்தான் உறவில் ஏற்பட்டுள்ள பதட்டம், அல்லது வணிக ரீதியிலும் இந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் மும்பை–கராச்சி செல்லும் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்படவில்லை.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.