Breaking News
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் கெர்பர்

ஸ்பெயினில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, நம்பர் 1 வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) தகுதி பெற்றார். இரண்டாவது சுற்றில் கேதரினா சினியகோவாவுடன் (செக்.) நேற்று மோதிய கெர்பர் 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். அடுத்த செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த சினியகோவா 6-1 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது.

இரு வீராங்கனைகளும் தங்களின் சர்வீஸ் ஆட்டங்களில் புள்ளிகளைக் குவித்ததால் இழுபறியாக நீடித்த செட்டில், கெர்பர் 7-5 என போராடி வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 2 மணி நேரம் நடந்தது குறிப்பிடத்தக்கது. மற்றொரு 2வது சுற்றில் லாத்வியாவின் அனஸ்டேசியா செவஸ்டோவா 6-3, 6-3 என்ற நேர் செட்களில் 2ம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை (செக்.) வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.