Breaking News
இலங்கை பயணம் குறித்து தமிழில் ‛டுவிட்’ செய்த மோடி

பிரதமர் மோடி தனது இலங்கை பயணம் குறித்து, டுவிட்டரில் தமிழில் ‛டுவிட்’ செய்துள்ளார்.

இலங்கை பயணம்:

இலங்கையில், வெசாக் தினத்தையொட்டி நடக்கும் கொண்டாட்டங்களில், தலைமை விருந்தினராக பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி, இன்று(மே 11) விமானம் மூலம், அவர், இலங்கை புறப்பட்டு செல்கிறார். இலங்கையில்,தமிழர்கள் அதிகம் வாழும், தேயிலை தோட்டங்கள் உள்ள பகுதிகளுக்கு செல்லும் மோடி, டிகோயா நகரில், அமைக்கப்பட்டுள்ள, 150 படுக்கைகள் உடைய மருத்துவமனையை திறந்து வைக்கிறார். இந்த மருத்துவமனை கட்டுவதற்கான நிதியை, நம் அரசு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழில் ‛டுவிட்’:

அவர் தனது இலங்கை பயணம் குறித்து டுவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளதாவது: இலங்கைக்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செல்கிறேன். அங்கு வெசாக் தின கொண்டாட்டம் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

எதிர்பார்ப்பு

பிரதமரின் இந்த பயணத்தின் போது தமிழக மீனவர்கள் பிரச்னை, இலங்கை தமிழர் பிரச்னை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.