Breaking News
அரை இறுதியில் யூகி பாம்ப்ரி

ஏடிபி கர்ஷி சாலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி தொடரில் இந்திய வீரர் யூகி பாம்ப்ரி அரை இறுதிக்கு முன்னேறினார்.

உஸ்பெகிஸ்தானின் கர்ஷி நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரின் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் யூகி பாம்ப்ரி, போட்டி தரவரிசையில் முதல் நிலை வீரரும், உலகத் தரவரிசையில் 96-வது இடத்தில் உள்ளவருமான உக்ரைனின் செர்ஜி ஸ்டேக்வோஸ்கியை எதிர்த்து விளையாடினார்.

சுமார் 1 மணிநேரம் 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் யூகி பாம்ப்ரி 6-2, 6-4 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். 237-வது இடத்தில் உள்ள யூகி பாம்ப்ரி இந்த சீசனில் 100 இடங்களுக்குள் உள்ள வீரரை வீழ்த்துவது இதுதான் முன்முறை.

மேலும் இந்த சீசனில் யூகி பாம்ப்ரி ஏடிபி சாலஞ்சர் போட்டிகளில் 3-வது முறையாக அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஹூஹாய், ஷென்சான் ஆகிய போட்டிகளிலும் யூகி பாம்ப்ரி அரை இறுதி வரை முன்னேறியிருந்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.