Breaking News
மாநில வலு தூக்கும் போட்டியில் மன்னார்குடி வீரர்கள் சாதனை

மாநில அளவிலான இளையோர் வலு தூக்கும் போட்டியில் மன்னார்குடி வீரர்கள் முதலிடம் பெற்றுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் மாநில அளவிலான இளையோர் வலு தூக்கும் போட்டி நடைபெற்றது. மாநிலம் முழுவதுமிருந்து 350-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த வீரர்களான பி.அருண்குமார் 53 கிலோ எடை பிரிவில் 2-ம் இடமும், 59 கிலோ எடை பிரிவில் வி.எஸ்.யோகேஸ்வரன் முதலிடமும், கங்காதரன் 3-ம் இடமும், 120 கிலோ எடை பிரிவில் ஜெ.அருண் முதலிடமும், கே.ஜி.குகன் 2-ம் இடமும், 83 கிலோ எடை பிரிவில் கே.யுவராஜ் முதலிடமும் பெற்றனர்.

எஸ்.விஷ்னு, பிரகாஷ், தினேஷ், டி.எம்.பாலயோகி, எம்.முத்துக்குமார், ஆர்.மகேந்திரன் ஆகியோர் சிறப்புத் தகுதிகளைப் பெற்றதை அடுத்து, அதிக புள்ளிகள் எடுத்த கணக்கில் மாநில அளவில் முதலிடம் பிடித்து மன்னார்குடி வீரர்கள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்றனர். மேலும் இந்த ஆண்டுக்கான இரும்பு மனிதர் என்ற பட்டம் மன்னார்குடி வீரர் வி.எஸ்.யோகேஸ்வரனுக்கு வழங்கப்பட்டது.

சிறப்பிடம் பெற்றவர்களை தமிழக வலு தூக்கும் சங்கப் பொதுச் செயலாளர் எஸ்.நாகராஜன், பயிற்சியாளர் எஸ்.விமல்ராஜா ஆகியோர் பாராட்டினர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.