Breaking News
நிதி ஆதாரங்களை பெருக்க ஜி.எஸ்.டி.,உதவும்: ரிசர்வ் வங்கி

மாநிலங்களின் நிதி ஆதாரங்களை பெருக்க ஜி.எஸ்.டி., உதவும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வரும் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பு முறையான ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், ஜி.எஸ்.டி., குறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்ததாவது: மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயலாற்றும் பாலமாய் அமைந்துள்ள ஜி.எஸ்.டி., மசோதா, மாநிலங்களின் நிதி ஆதாரங்களை பெருக்கும். கூட்டாட்சிக்கு வலு சேர்க்கும். ஜி.எஸ்.டி., அறிமுகம் ஆவதன் மூலம் வளர்ச்சி, பணவீக்கத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உருவாகும். இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.