Breaking News
எல்லையில் ராணுவம் – போலீஸ் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை

காஷ்மீர் எல்லைப்பகுதியில் இளைஞர்கள் பலருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவது போன்ற வீடியோவை பயங்கரவாதிகள் வெளியிட்டுள்ளனர். இதனால் காஷ்மீரை சேர்ந்த இளைஞர்களுக்கு பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இதனையடுத்து காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. ராணுவமும், போலீசாரும் இணைந்து இந்த தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். சுமார் 1000 க்கும் மேற்பட்ட வீரர்கள் சோபியான் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா, இளைஞர்களுக்கு ரகசிய இடத்தில் பயிற்சி அளிக்கப்படுவது உண்மையா என கண்டுபிடிக்கும் பணியில் இறங்கி உள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.