Breaking News
புதுச்சேரி சட்டசபையில் ஜிஎஸ்டி தாக்கல்

புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடர் நேற்று (மே 16) கவர்னர கிரண்பேடி உரையுடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று சட்டசபை அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் ஜூன் 16 வரை சட்டசபை கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. 20 அமர்வுகளாக சட்டசபை கூட்டத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்திற்கு பிறகு சட்டசபையின் இன்றைய கூட்டம் துவங்கியது. இதில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஜிஎஸ்டி மசோதாவிற்கான சட்டமுன் வரைவை தாக்கல் செய்தார். ஜூலை முதல் தேதியிலிருந்து நாடு முழுவதும் ஜிஎஸ்டி.,யை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் புதுச்சேரியில் ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.