Breaking News
ஜனாதிபதி போட்டியில் நான் இல்லை : பிரணாப் முகர்ஜி

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதில் ஆளும் பா.ஜ.,வும், எதிர்கட்சிகளும் இறங்கி உள்ளன. மாநில கட்சிகளை இணைத்து, பா.ஜ.,வுக்கு எதிரான கூட்டணி அமைத்து, அதன் சார்பில் பொது வேட்பாளை முடிவு செய்வதற்காக காங்., தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் பேசிய பிரணாப் முகர்ஜி, ‘மீண்டும் ராஷ்டிரபதி பவனுக்கு திரும்பும் போட்டியில் பங்கேற்கும் எண்ணமில்லை. இன்னும் இரண்டு மாதங்களில் எனது பணி நிறைவு பெற இருக்கிறது. ஜூலை 25ம் தேதி புதிய ஜனாதிபதி பொறுப்பேற்க உள்ளார். என்னுடன் சேர்ந்து பணியாற்றிய அதிகாரிகளை, அவர்கள் சார்ந்த அமைச்சகங்ளுக்கும் துறைகளுக்கும் திரும்ப அனுப்புகிறேன்’ என தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.