Breaking News
சிரஞ்சீவி – பவன் கல்யாண் இணையும் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

சிரஞ்சீவி – பவன் கல்யாண் இணையும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று தயாரிப்பாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. ‘கைதி எண் 150’ படத்தைத் தொடர்ந்து சிரஞ்சீவி நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன.

சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண் இருவரும் இணைந்து நடிக்க திட்டமிட்டுள்ளார்கள். த்ரிவிக்ரம் இயக்கவுள்ள இப்படத்தை சுப்பாராமிரெட்டி தயாரிக்கவுள்ளார். இதனை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தாலும், படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், சுப்பாராமி ரெட்டி விடுத்துள்ள அறிக்கையில், “இந்த மிகப்பெரிய இணை சீக்கிரம் படப்பிடிப்புக்குப் போகும் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன். சிரஞ்சீவி, பவன் கல்யாண் இருவரும் தற்போது வேறு சில வேலைகளில் ஆழ்ந்துள்ளனர். அதுமுடிந்தவுடன் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக துவக்கவுள்ளேன். தெலுங்கு சினிமா துறையில் மிகப்பெரிய படமாக இது இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.