Breaking News
சென்னை சில்க்சில் தீ: விபத்திற்குள்ளான பகுதி அபாயகரமானதாக அறிவிப்பு

சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் காலை 4.45 மணிக்கு தீப்பற்றியது. கடையின் அடித்தளத்தில் தீ பற்றி எரிந்து வருகிறது.தொடர்ந்து பல மணி நேரமாக போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. புகையும் தொடர்ந்து வெளியேறி வருகிறது. தீயின் வெப்பம் காரணமாக கடையின் கண்ணாடிகளும் உடைந்து நொருங்கி வருகின்றன. அடித்தளத்தில் தீ எரிந்து வருவதால் கட்டிடத்தின் ஸ்திரதன்மைக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தீயணைப்பு வீரர்களாலும் கடைக்குள் செல்ல முடியவில்லை. கடையில் இருந்து ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தொடர்ந்து தீ எரிந்து வருவதால், அப்பகுதி அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புகையால் 7 மாடி கட்டிடத்தின் உறுதி தன்மை பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. பாதுகாப்பு கருதி தீவிபத்து ஏற்பட்ட கடையை சுற்றி உள்ள 100 க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு, அங்கு தங்கி இருக்கும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வாகனங்களும் மாற்று பாதை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.