Breaking News
சுவாதி கொலை வழக்கு; தந்தை டிஜிபி-யிடம் புகார்

சுவாதி கொலை வழக்கு படத்துக்கு தடை விதிக்க கோரி டிஜிபி-யிடம், சுவாதி தந்தை புகார் மனு அளித்துள்ளார்.

சுவாதி கொலை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு கொலை வழக்கு. சுவாதி கொலை வழக்கு என்ற பெயரிலே ரமேஷ் செல்வன் என்ற இயக்குநர் திரைப்படம் எடுத்துள்ளார். இதன் டிரைலர் நேற்று வெளியானது.

இந்நிலையில் சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி டிஜிபி-யிடம் இன்று புகார் மனு அளித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் இறுதி காட்சியில் ராம்குமார் கழுத்தை காவல்துறையினர் அறுப்பது போன்ற காட்சி உள்ளது. ஆனால் இந்த படம் குறித்து எந்த தகவலும் இல்லை.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.