Breaking News
மீண்டும் இன்று கொழுந்து விட்டு எரிகிறது

சென்னை சிலக்ஸ் கட்டடத்தின் முன் பகுதியில், இன்று காலை தீ மீண்டும் கொழுந்து விட்டு எரிகிறது.

சென்னை, தி.நகர், உஸ்மான் சாலையில், ஏழு மாடிகள் கொண்ட பிரபல ஜவுளி நிறுவனமான, சென்னை சிலக்ஸ் கட்டடத்தில், நேற்று(மே 31) அதிகாலை, 4:00 மணியளவில், தீ விபத்து ஏற்பட்டது. நேற்று முழுவதும் போராடியும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் இன்று அதிகாலை 3.20 மணியளவில் கட்டடத்தின் வலது புறத்தின் ஒரு பகுதியில் 7 ம் தளம் முதல் 2ம் தளம் வரை திடீர் என இடிந்து விழுந்தது.
இதனை தொடர்ந்து இடிந்து விழுந்த பகுதியில் சென்னை கலெக்டர் அன்புச்செல்வன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின் அவர் தெரிவிக்கையில், ‛ஆய்வுக்கு பின் இடிந்து விழுந்து கட்டடத்திற்கு அருகே உள்ள கட்டடங்களுக்கு பாதிப்பில்லை. இடிந்த நிலையில் உள்ள மீதி கட்டடத்தை இடிப்பது குறித்து பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தியபின் முடிவு எடுக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.