Breaking News
தமிழகம்: பல்வேறு மாவட்டங்களில் மழை

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலை மற்றும் தென்மேற்குபருவமழை துவங்கியதை தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை , காற்றுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், குந்தாரபள்ளி, வெப்பனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை காற்றுடன் மழை பெய்தது. மேலும் ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை,காரப்பட்டு, சாமல்பட்டி, பாம்பாறு,ஆகிய பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. அக்னி வெயிலுக்கு வதங்கிய மக்களுக்கு இம்மழை மகிழ்ச்சியை தந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்துவருகிறது.

திருச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

திருச்சி: திருச்சி மாநகரம் மற்றும் அரியமங்கலம், எஸ்.ஐ.டி.காட்டூர், தில்லைநகர், கே.கே.நகர் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் மாவட்டத்தின் மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இடி மற்றும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்திலும் மழை

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம்,சங்கராபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.