Breaking News
தாய்லாந்து பாட்மிண்டன் தொடர்: அரை இறுதியில் சாய்னா நெவால்

தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாய்னா நெவால், சாய் பிரணீத் ஆகியோர் அரை இறுதிக்கு முன்னேறினார்கள்.

பாங்காக்கில் நடைபெற்று வரும் இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 11-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நெவால் 21-15, 20-22, 21-11 என்ற செட் கணக்கில் ஜப்பானின் ஹருகு சுசூகியை வீழ்த்தினார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 9 நிமிடங்கள் நடைபெற்றது.

ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் போட்டி தரவரிசையில் 3-ம் நிலை வீரரான இந்தியாவின் சாய் பிரணீத் 21-16, 21-17 என்ற நேர் செட்டில் தாய்லாந்தின் கன்டபோன் வாங்ஷரயோனை வீழ்த்தினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.