Breaking News
இந்தியா-பாக்., கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டு ரசித்த மல்லையா

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில், இந்தியா பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தை, விஜய் மல்லையா ஹாயாக கேலரியில் அமர்ந்து நேரில் கண்டு ரசித்தார்.

தலைமறைவு:

வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாமல் விஜய் மல்லையா லண்டன் தப்பி சென்றார். அங்கிருந்து அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவருக்கு, அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவருக்கு எதிராக கோர்ட் மூலம் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து மத்திய அரசு சார்பில் அவரை நாடு கடத்தவும் இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை விடப்பட்டது.

வைரல் புகைபடம்:

இந்நிலையில், இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் முக்கிய லீக் போட்டியான இந்தியா-பாக்., போட்டி நேற்று(ஜூன் 4) பர்மிங்ஹாம் எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியை வங்கிகளிடம் கடன் வாங்கி இங்கிலாந்து தப்பி சென்ற மல்லையா நேரில் கண்டு ரசித்தார். இவர் போட்டியை நேரில் ரசிக்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.