Breaking News
தரங்காவுக்கு 2 ஆட்டத்தில் தடை

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொட ரில் நேற்று முன்தினம் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் இலங்கை அணியின் தற்காலிக கேப்டனாக செயல் பட்ட உபுல் தரங்காவுக்கு 2 ஆட்டங் களில் விளையாட தடை விதிக் கப்பட்டுள்ளது.

இந்த ஆட்டத்தில் இலங்கை வீரர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் 50 ஓவர்கள் வீசி முடிக்கவில்லை. நிர்ண யிக்கப்பட்ட காலத்துக்குள் 4 ஓவர் களை குறைவாக வீசியிருந்தனர். இதனால் ஐசிசி விதிகளின்படி, மேட்ச் ரெப்ரி டேவிட் பூன் தற்காலிக கேப்டனாக செயல்பட்ட உபுல் தரங்காவுக்கு 2 ஆட்டங் களில் விளையாட தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் அணியில் உள்ள வீரர் களுக்கு ஆட்டத்தின் சம்பளத் தொகையில் 60 சதவீதம் அப ராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தரங்காவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் இலங்கை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.