Breaking News
தினகரன் வழக்கில் இன்று விசாரணை

தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு இன்று(08-06-17) விசாரணைக்கு வருகிறது.
தினகரன் மீதான, அன்னிய செலாவணி மோசடி வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டி உள்ளது. அந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது. அதற்காக, தினகரன் நேரில் ஆஜராவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. அன்னிய செலாவணி மோசடி மற்றும் சொகுசு கார் இறக்குமதி வழக்குகளில் சிக்கி உள்ள, சசிகலாவுக்கு மட்டும், ‘வீடியோ கான்பரன்சிங்’ வாயிலாக ஆஜராக, நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.

அவரது கணவர் நடராஜன், அக்கா மகன்கள் தினகரன், சுதாகரன், பாஸ்கரன் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என, எழும்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.