Breaking News
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று காஞ்சிபுரம் வருகை

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இன்று, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வருகிறார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் அருகே உள்ள, ஸ்ரீசங்கர மடத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று வருகிறார். அரக்கோணம், ‘ராஜாளி’ கடற்படை தளத்தின் விமான தளத்தில் இருந்து, கார் மூலம் காஞ்சிபுரத்திற்கு, பகல், 2:00 மணிக்கு வருகிறார்.
அம்மன் கோவில் திருமண மண்டபத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின், தரிசனத்திற்காக காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்கிறார். சன்னிதி வரை அவர் செல்ல, ‘பேட்டரி’ கார் பயன்படுத்தப்பட உள்ளது. தரிசனம் முடிந்ததும், சங்கர மடத்திற்கு செல்கிறார். அங்கு, சங்கராச்சாரியார்களை சந்தித்து, மாலை, 4:30 மணிக்கு டில்லி புறப்பட்டு செல்கிறார்.
ஜனாதிபதி வருவதை முன்னிட்டு, காஞ்சிபுரம் நகரில், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, கோவில் அருகே நேற்று, போலீசார் ஒத்திகை நடந்தது.
இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமணி, வணிக குற்றப்புலனாய்வு பிரிவு கண்காணிப்பாளர் செந்தில்குமாரி, துணை ஆட்சியர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி வந்து செல்லும் வரை, காமாட்சி அம்மன் கோவில் அருகில் உள்ள கடைகளை மூட, போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.