Breaking News
அமலானது ஜி.எஸ்.டி: ஜனாதிபதி பெருமிதம்

பார்லிமென்டில் நேற்று நள்ளிரவு (ஜூன் 30) ஜிஎஸ்டியை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிமுகப்படுத்தினார்.

ஜி.எஸ்.டி அறிமுக நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் பேசியதாவது: பல்வேறு நீண்ட நெறிமுறைகளுக்கு பிறகு ஜி.எஸ்.டி அமலாகிறது. இது நாட்டின் முக்கியமான தருணம். இதனை சாத்தியப்படுத்திய அரசுக்கு எனது வாழ்த்துக்கள்.

நிதியமைச்சராக நான் இருந்தபோது ஜி.எஸ்.டி உருவாக்கத்தில் பெரிய அளவில் பங்காற்றி உள்ளேன். 14 ஆண்டு பயணம் பயனை எட்டும் நேரம் வந்தள்ளது. ஜி.எஸ்.டிக்கு நான் கடந்தாண்டு ஒப்புதல் அளித்தேன். ஜி.எஸ்.டிக்கு ஒப்புதல் அளித்ததை பெருமையாக கருதுகிறேன்.

மத்திய, மாநில அரசுகளின் கருத்தொற்றுமை அடிப்படையிலே ஜி.எஸ்.டி உருவாகி உள்ளது. அரசியல்சட்டப்படி ஜி.எஸ்.டி உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி அறிமுகம் நாட்டின் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு பேசினார்.

பின் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மணி அடித்து துவக்கி வைக்க, நாடு முழுவதும் ஜி.எஸ்.டி., முறை அமலானது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.