Breaking News
எம்.எல்.ஏ., எதிர்ப்பால் ஆய்வை கைவிட்டு பாதியில் வெளியேறிய கிரண்பேடி

புதுச்சேரியில் அரசு, கவர்னர் இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. சமீபத்தில் சட்டசபை கூட்டத்தில் பேசிய முதல்வர் நாராயணசாமி, தனது அனுமதியின்றி அரசு அதிகாரிகள் யாரும் கவர்னர் கிரண்பேடியை சந்திக்கக் கூடாது. அனுமதியின்றி தொகுதிக்கு கிரண்பேடி ஆய்வு செய்ய வந்தால் எம்.எல்.ஏ.,க்கள் அதனை எதிர்த்து போராட வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில், இன்று (ஜூலை 1) காலையில் உழவர்கரை பகுதியில் கிரண்பேடி தூய்மை பணிகளை ஆய்வு செய்ய சென்றார். அப்போது தொகுதி காங்., எம்.எல்.ஏ., பாலன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆய்வு தொடர்பாக கிரண்பேடியை முற்றுகையிட்டு, கேள்வி எழுப்பினார். இதனால் பிச்சைவீராம்பட்டி பகுதியில் ஆய்வு பணிகளை பாதியில் கைவிட்ட கிரண்பேடி, அங்கிருந்து வெளியேறினார். இச்சம்பவத்தால் புதுச்சேரி அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.