Breaking News
நீர்வீழ்ச்சியில் குளித்த போது ‛‛செல்பி’: 2 மாணவர்கள் பலி

தெலுங்கானாவில் நீர்வீழ்ச்சியில் குளித்த 2 மாணவர்கள் செல்பி எடுத்த போது பள்ளத்தில் விழுந்து பலியாயினர்.

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தைச்சேர்ந்த 2 மாணவர்கள் உள்பட 4 இளைஞர்கள், குண்டாலா என்ற நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றனர். இதில் அன்சார், பைசான் என்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் நீர்வீழ்ச்சி முன்பாக நின்று செல்பி எடுத்தனர். திடீரென நீர்வழ்ச்சி முன்பாக இருந்த பள்ளத்தில் விழுந்தனர். ஆழமான பகுதிக்கு இருவரையும் தண்ணீர் இழுத்து சென்றால் நீரில் முழ்கி பலியாயினர். சம்பவ இடத்தில் தீயணைப்புபடையினர் மாணவர்களை தேடினர். இதில் ஒருமாணவர் பிணமாக மீட்கப்பட்டார். மற்றொரு மாணவனை தேடும் பணி நடக்கிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.