Breaking News
ஜெர்மனி சென்றார் பிரதமர் மோடி; விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜெர்மனி சென்றார். அவருக்கு ஹம்பர்க் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜெர்மனியில் ஹம்பர்க் நகரில் இன்று(ஜூலை 7) ஜி-20 மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், இந்திய பிரதமர் மோடி உள்பட பலநாட்டு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் மூன்று நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக இஸ்ரேல் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து ஜெர்மனி சென்றார். ஹம்பர்க் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜி-20 மாநாட்டில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடி, ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகள் உள்பட 19 நாட்டு தலைவர்களை சந்திக்க உள்ளார். அவர்களுடன் பயங்கரவாதம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜெர்மனி சென்றார். அவருக்கு ஹம்பர்க் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெர்மனியில் ஹம்பர்க் நகரில் இன்று(ஜூலை 7) ஜி-20 மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், இந்திய பிரதமர் மோடி உள்பட பலநாட்டு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் மூன்று நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக இஸ்ரேல் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து ஜெர்மனி சென்றார். ஹம்பர்க் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜி-20 மாநாட்டில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடி, ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகள் உள்பட 19 நாட்டு தலைவர்களை சந்திக்க உள்ளார். அவர்களுடன் பயங்கரவாதம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.