‘தரமான பாலுக்காக குரல் கொடுப்பாரா’ : ஸ்டாலினுக்கு முரளிதரராவ் கேள்வி
”மாட்டிறைச்சிக்காக போராடும் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், தரமான பால் கிடைக்க குரல் கொடுப்பாரா?” என, மதுரையில் பா.ஜ., மேலிட பார்வையாளர் முரளிதரராவ் கேள்வி எழுப்பினார்.
அவர் கூறியதாவது: ஊழல் இல்லாத அரசியலை கொண்டு வர பா.ஜ., பாடுபடுகிறது. மத்தியிலும், சில மாநிலங்களிலும் நல்லாட்சியை தருகிறது. மூன்றாண்டு கால பா.ஜ., சாதனைகளையும், செயல்பாடுகளையும் மக்களிடம் கொண்டு செல்ல தொண்டர்கள் முழுநேர விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ஆறாயிரம் பேர் இதில் ஈடுபட்டுள்ளனர்.
பா.ஜ., சாதனைகளை மக்கள் அறிந்துள்ளனர். முத்ரா, ஜன்தன் போன்ற திட்டங்கள் அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மக்கள் ஊழல் இல்லாத நல்ல அரசை எதிர்பார்க்கின்றனர். மக்களுக்கு தரமான பால் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக, இறைச்சிக்காக மாடுகளை கொல்ல தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. மாட்டிறைச்சிக்காக போராடும் ஸ்டாலின், தரமான பால் கிடைக்க குரல் கொடுப்பாரா?
நாட்டில் நடைமுறையில் இருந்த பல வரிகளை தவிர்த்து, ஒரே வரியாக ஜி.எஸ்.டி.,யை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. குறைகளை களைய கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், 70 சதவீத ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெறுவார்.
இவ்வாறு கூறினார்.”மாட்டிறைச்சிக்காக போராடும் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், தரமான பால் கிடைக்க குரல் கொடுப்பாரா?” என, மதுரையில் பா.ஜ., மேலிட பார்வையாளர் முரளிதரராவ் கேள்வி எழுப்பினார். அவர் கூறியதாவது: ஊழல் இல்லாத அரசியலை கொண்டு வர பா.ஜ., பாடுபடுகிறது. மத்தியிலும், சில மாநிலங்களிலும் நல்லாட்சியை தருகிறது. மூன்றாண்டு கால பா.ஜ., சாதனைகளையும், செயல்பாடுகளையும் மக்களிடம் கொண்டு செல்ல தொண்டர்கள் முழுநேர விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ஆறாயிரம் பேர் இதில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜ., சாதனைகளை மக்கள் அறிந்துள்ளனர். முத்ரா, ஜன்தன் போன்ற திட்டங்கள் அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மக்கள் ஊழல் இல்லாத நல்ல அரசை எதிர்பார்க்கின்றனர். மக்களுக்கு தரமான பால் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக, இறைச்சிக்காக மாடுகளை கொல்ல தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. மாட்டிறைச்சிக்காக போராடும் ஸ்டாலின், தரமான பால் கிடைக்க குரல் கொடுப்பாரா? நாட்டில் நடைமுறையில் இருந்த பல வரிகளை தவிர்த்து, ஒரே வரியாக ஜி.எஸ்.டி.,யை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. குறைகளை களைய கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், 70 சதவீத ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெறுவார். இவ்வாறு கூறினார்.