Breaking News
கணித ஆசிரியர் பணிக்கு பிரதமர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கலாம்: ராகுல்

பழைய செல்லாத ரூபாய் நோட்டுக்களை எண்ணுவதற்கு பிரதமரின் அப்ளிகேஷனில் கணிதஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என காங்., துணை தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் பழைய ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன என கூறியிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல், தனது டுவிட்டரில்; பழைய ரூபாய் நோட்டுகளை அரசு தொடர்ந்து எண்ணி வருகிறது. மேலும் கணித ஆசிரியரை தேடி வருகிறது. பிரதமரின் அப்ளிகேஷனில் சென்று கணித ஆசிரியர் பணிக்கு விண்ணப்பியுங்கள். இவ்வாறு கிண்டலாக தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.