Breaking News
எல்லையில் அனைத்து பகுதிகளிலும் மோதல் வெடிக்கும் : இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை

எல்லையின் சில பகுதிகளில் இந்தியா மோதலை ஊக்குவித்தால், அனைத்து பகுதிகளிலும் மோதல் வெடிக்கும் என சீனா எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சீன அரசின் அதிகாரப்பூர்வ நாளிதழான குளோபல் டைம்ஸ்-ல் வெளியிடப்பட்ட கட்டுரையில், எல்லையை ஒட்டிய சில பகுதிகளில் இந்திய ராணுவம் மோதல் போக்கை ஊக்குவிக்குமானால், அது இரு தரப்பு எல்லை முழுவதும் பரவி, முழு அளவிலான மோதலாக வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பீஜிங்கில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லூ காங், சீன எல்லைக்குள் நுழைந்துள்ள தனது படையை இந்தியா திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் . இந்த விவகாரத்தில் சீனாவின் கருத்தை இந்தியா புரிந்து கொள்ளும் என நம்புகிறேன். அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில், எல்லை தாண்டும் செயலை இந்தியா மேற்கொள்ளக் கூடாது என்று தெரிவித்தார்.பூட்டானின் டோக்லாம் பகுதிக்குள் இரு தரப்பும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. இதனால், சிக்கிமை ஒட்டிய சீன எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.