Breaking News
டோல்கேட்டில் 3 நிமிடங்கள் காத்திருப்பா.. கட்டணம் செலுத்த தேவையில்லை

டோல்கேட்டில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் சுங்க கட்டணம் செலுத்த தேவையில்லை என்ற தகவல், ஆர்.டி.ஐ.,யின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

டோல்கேட் கட்டணம்

ஒரு மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டத்திற்கோ அல்லது மாநிலத்திற்கோ சாலையில் பயணிக்கும் போது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்டுகளில் கண்டிப்பாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் கார், லாரி என வாகனத்தை பொறுத்து மாறுபடும்.

இந்நிலையில் டோல்கேட்டுகளில் வசூலிக்கப்படும் கட்டண விவரங்கள் குறித்து பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரி ஓம் ஜிண்டால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்(ஆர்.டி.ஐ.,) கேள்வி கேட்டிருந்தார்.

மத்திய அரசு அளித்த விளக்கம்:

டோல்கேட்டில் வசூலிக்கப்படும் கட்டணத்துக்கு வரி இல்லை. சேவை கட்டணமாகவே அவை வசூலிக்கப்படும். டோல்கேட்டில் மூன்று நிமிடங்களுக்கு மேல் வாகனத்தில் காத்திருந்தால் அவர்கள் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலின்படி, டோல்கேட்டில் 3 நிமிடத்திற்கு மேல், மிக நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை என தெரியவருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.