Breaking News
ஏரிகள் உடையும் என்பது போன்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் அமைச்சர் உதயகுமார் வேண்டுகோள்
எழிலகத்தில் பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் அமைச்சர்  உதயக்குமார் தலைமையில் தொடங்கியது. முன்னதாக  அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதில் உண்மை இல்லை. ஏரிகள் உடையும் என்பது போன்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கோவை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தேனியில் இயல்பை விட இந்தாண்டு கூடுதல் மழை பெய்து உள்ளது.
சிறு, பெரிய நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன. தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்ற, ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.