Breaking News
தொலைதூர கல்வியில் தொழில்நுட்ப படிப்புகள்: சுப்ரீம் கோர்ட் தடை

தொலைதூர வழிக்கல்வி மூலம் தொழில்நுட்ப படிப்புகளை நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.

வழக்கு ஒன்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பொறியியல் உள்ளிட்ட தொழில் நுட்ப படிப்புகளை தொலை தூர வழி கல்வியில் நடத்த கல்வி நிறுவனங்களுக்கு தடை விதித்ததுடன் இது தொடர்பாக பஞ்சாப் – அரியானா மாநில ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது.இரண்டு ஆண்டுகளுக்கு முன் வழக்கு ஒன்றை விசாரித்த பஞ்சாப் – அரியானா மாநில ஐகோர்ட், கணிப்பொறி அறிவியல் படிப்பை கல்லூரி சென்று படித்தவர்களும், தொலைவழிக் கல்வியில் படித்தவர்களையும் சமமாக கருத முடியாது என உத்தரவு பிறப்பித்திருந்தது.

 

ரத்து

தொலைதூர கல்வியில் தொழில்நுட்ப கல்விகளை படிக்கலாம் என்று ஒடிசா ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவையும் சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.