Breaking News
ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா வான்தாக்குதல்

ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவிலும் கால் பதித்துள்ளனர். அங்கு அவ்வப்போது அவர்கள் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்த தாக்குதல், சோமாலியாவின் வடகிழக்கு பகுதியில் நடத்தப்பட்டுள்ளது. இதை அமெரிக்க ராணுவத்தின் ஆப்பிரிக்க தலைமை உறுதி செய்துள்ளது.

ஆனால் இந்த தாக்குதல்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஏற்பட்ட உயிர்ச்சேதம் பற்றி தகவல் இல்லை.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.