Breaking News
கருத்து சுதந்திரத்தை பறிக்கும் எடப்பாடி அரசு மக்களின் கோபத்தை சம்பாதிக்கிறது : டிடிவி தினகரன்

கருத்து சுதந்திரத்தை பறிக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்களின் கோபத்தை சம்பாதிக்கிறது என டிடிவி தினகரன் கூறியுள்ளார். தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரட்டை இலை சின்னத்தை மீட்க தங்களது அணி போராடி வருவதாக கூறினார். OPS அணி தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களில் போலி கையெழுத்துக்களை போட்டிருக்கிறார்கள் என்றார். எனவே அந்த அணியினரின் தில்லுமுல்லு குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்றார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி கலைய வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது. மத்திய அரசின் கையிலே அமலாக்கத் துறை, CBI, வருமான வரித்துறை இருப்பதால் மத்தியில் ஆளும் கட்சியினுடைய தமிழக தலைவர்களுக்கே இங்குள்ள ஆட்சியாளர்கள் அஞ்சுவதாக கூறினார். மக்கள் எப்படி போனால் என்ன பதவி சுகம் ஒன்றே பெரிது என்ற எண்ணத்தில் தான் தற்போதைய தமிழக அரசு இயங்கி கொண்டிருப்பதாக சாடினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.