Breaking News
2ஜி வழக்கில் டிச.,5ல் தீர்ப்பு தேதி அறிவிப்பு

புதுடில்லி: 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் தீர்ப்பு தேதி டிசம்பர் 5 ம் தேதி அறிவிக்கப்படும் என டில்லி சிபிஐ கோர்ட் அறிவித்துள்ளது.

 

எதிர்பார்ப்பு

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது நடந்த ‛2ஜி’ ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பாக வழக்கில் தீர்ப்பு தேதி இன்று(நவ.,7) அறிவிக்கப்படும் என டில்லி சிபிஐ சிறப்பு கோர்ட் நீதிபதி சைனி அறிவித்திருந்தார். இதனால், இன்று பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

 

ஒத்திவைப்பு

இந்நிலையில் , இந்த வழக்கில் தீர்ப்பு இன்னும் தயாராகததால், டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்துள்ளார். தீர்ப்பு தயாராக இன்னும் 3 வார கால அவகாசம் தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.