Breaking News
பண மதிப்பிழப்பு மோடியின் சிந்தனையற்ற செயல் : ராகுல்

உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை கொண்டாட பா.ஜ., ஏற்பாடு செய்துள்ளது. இன்று நவம்பர் 8 ம் தேதியை கறுப்பு பண ஒழிப்பு தினம் என்ற பெயரில் கொண்டாடுகிறது.
அதே சமயம், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நவம்பர் 8 ம் தேதியை கறுப்பு தினமாக அறிவித்து, போராட்டங்கள் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இந்நிலையில் பண மதிப்பிழப்பு குறித்து காங்., துணைத் தலைவர் ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், பண மதிப்பிழப்பு ஒரு பேரிடர். பிரதமரின் சிந்தனையற்ற செயல். இந்த சிந்தனையற்ற செயலால் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் நேர்மையான கோடிக்கணக்கான இந்தியர்களின் பக்கம் காங்கிரஸ் நிற்கும். ஆட்சிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு ஏழை மக்களின் இந்த கண்ணீரே சாட்சி. மழையென பொழியும் இந்த கண்ணீரை பார்க்கவில்லையா என தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.