Breaking News
ரஜினி, கமல் நடிகர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அரசியலுக்கு வருவது பேரழிவு: பிரகாஷ்ராஜ் பேட்டி

ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு மிகப்பெரிய பேரழிவு என்று பெங்களுருவில் நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி அளித்துள்ளார். நடிகர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அரசியலுக்கு வரக் கூடாது என்று அவர் கூறியுள்ளார். மேலும் திரைப்பட நடிகர்கள் கட்சித் தலைவர்களாவது நாட்டுக்குப் பேரழிவு என்று கூறியுள்ளார். அரசியல் கட்சியில் நடிகர்கள் சேர்வதையும் தான் விரும்பவில்லை என்று கூறினார்.

நடிகர்கள் தமது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். தான் எந்த அரசியல் கட்சியிலும் சேரப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் நடிகர் கமல் புதிதாக தொடங்கும் கட்சியில் ஒருபோதும் சேரமாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பிரதமர் மோடி, உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் மீது விமரிசித்து கருத்து தெரிவித்து இருந்தார். தன்னை விட இவர்கள் இருவரும் சிறந்த நடிகர்கள் என்றும் 5 தேசிய விருதுகளுக்குத் தகுதியானவர்கள் என்று விமர்சித்ததையடுத்து லக்னோ நீதிமன்றத்தில் இவர் மீது வழக்குத் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.